தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலவச வீட்டுமனைகளை முறையாக வழங்க கோரிக்கை

 

Advertisement

ஈரோடு,ஜூன்24: ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழக எழுச்சி பேரவை நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :பெருந்துறை அடுத்த அட்டவணைப்பிடாரியூரில், கடந்த 1998ம் ஆண்டு, ஆதிதிராவிட மக்களுக்கு 103 மனையிடங்கள் வழங்கப்பட்டிருந்தன.

ஆனால் அவர்கள் குடியேறததால், கடந்த 2020ஆம் ஆண்டு, 103 வீட்டுமனை பட்டாகளும் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும், அவர்கள் வேறு இடத்தில் இலவச வீட்டுமனைகள் பெற்று வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில், பிடாரியூரில் இலவச வீட்டுமனை ரத்து செய்யப்பட்டவர்களில், ஒரு சிலருக்கு மீண்டும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு இல்லாத காரணத்தினாலும், ஆதிதிராவிட நலத்துறையில் கணினி முறையில் ஆவணப்பதிவு இல்லாததாலும், இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்களுக்கே மீண்டும் பட்டா வழங்கப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு, இலவச வீட்டுமனை பட்டா மீண்டும் பெற்றவர்களுக்கு ரத்து செய்து விட்டு, நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழக எழுச்சி பேரவை தெரிவித்துள்ளது.

Advertisement

Related News