தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயில் காவலர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்க கோரிக்கை

கொள்ளிடம், ஏப். 25: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பல கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் இரவு நேர காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காலமான 2019ம் ஆண்டு ஒரு வருடத்திற்கான ஊதியம் இரவு காவலர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. மாவட்டத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் பணிபுரிந்து வரும் 40 இரவு காவலர்களுக்கு ஒரு வருட காலத்திற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படாததால் அவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

Advertisement

குறைந்த அளவு ஊதியத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால் கொரோனா காலத்தில் ஒரு வருட காலமாக வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை இதுவரை அவர்களுக்கு வழங்கவில்லை. அவர்கள் இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் ஊதியம் கிடைக்கவில்லை. எனவே கோயில்களில் பணிபுரியும் இரவு நேர காவலர்களின் குடும்பங்களின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக போர்க்கால அடிப்படையில் அவர்களுக்கு கொரோனா கால ஊதியத்தை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரவு நேர காவலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News