தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அங்கன்வாடியை திறக்க கோரிக்கை

 

Advertisement

விருதுநகர், ஜூலை 16: அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என பெற்றோர்கள் மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சிவகாசி அனுப்பன்குளம் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் நேற்று மனு அளித்தனர். மனுவில், சிவகாசி அனுப்பன்குளம் அங்கன்வாடியில் 35 குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர். கடந்த 6 வருடங்களாக அங்கன்வாடி மையம் மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கட்டிடத்தின் தரைத்தளம் குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. கட்டிடத்தை சுற்றிலும் முட்புதர்கள் இருப்பதால் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.

மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதியின்றி குழந்தைகள் சிரமத்தில் உள்ளனர். மேலும் ஊராட்சி குப்பை அள்ளும் வண்டிகள் மையத்தின் முன்பகுதியில் நிறுத்தப்படுவதால் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் அங்கன்வாடியில் உதவியாளரும் இல்லை. இந்நிலையில் 2021ல் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படவில்லை. புதிய கட்டிடத்தில் மின் இணைப்பு, தண்ணீர் வசதி, கைப்பிடி சுவர் இல்லை என்ற காரணங்களால் திறக்கப்படவில்லை. கலெக்டர் தலையிட்டு புதிய கட்டிடத்தில் உள்ள குறைகளை சரி செய்து திறக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Advertisement