தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை

திருவள்ளூர், ஜூன் 23: தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளி கல்வி அமைச்சர், பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஆகியோருக்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில பொதுச் செயலாளர் சா.ஞானசேகரன் ஒரு கோரிக்கை மனு அனுப்பி வைத்துள்ளார் அதன் விவரம் வருமாறு: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்து 2 வாரங்கள் நிறைவடைந்து உள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படாமல் தொடர்ந்து காலியாக உள்ளது. மேலும் கடந்தாண்டு 600க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியர்களாக சென்றுள்ளதால் அந்தப் பணியிடங்கள் தொடர்ந்து காலியாகவே உள்ளது. இதனால் அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் ஆசிரியர் இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர்.

Advertisement

மேலும் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதால் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் சிக்கல் உள்ளதாக அறிகிறோம். எனவே நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய முடியாமல் போனால் போதிய ஆசிரியர்கள் இன்றி வருகின்ற முதல் பருவத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே போர்க்கால அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பட்டியல் இருந்தால் அவர்களை உடனே நியமனம் செய்ய அரசு முன்வர வேண்டும். இல்லையேல் மாவட்டம் தோறும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.

Advertisement

Related News