தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை

 

உத்தமபாளையம், ஜூலை 2:உத்தமபாளையம் தாலுகா தலைமை அரசு மருத்துவமனை நூறு வருடமாக செயல்பட்டு வருகிறது. இங்கு அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப 12 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் இங்கு நான்கு மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மருத்துவர்கள் பற்றாகுறையால், இரவில் சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் மகப்பேறு சிகிச்சை பிரிவு மூடப்பட்டு விட்டதால், கர்ப்பிணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளானர்.

இதுகுறித்து உத்தமபாளையம் பொதுமக்கள் கூறுகையில், உத்தமபாளையம் அரசு மருத்துவமனை, அதிகமான வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைகளில் ஒன்றாக உள்ளது இதில் தற்போது நான்கு டாக்டர்கள் வரை பணியில் இருந்தாலும் பிரசவம் நடப்பதில்லை. பிரசவம் பார்க்க கம்பம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மகப்பேறு சிகிச்சை பிரிவுக்கு மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.