தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தார்சாலையை முழுமையாக சீரமைக்க கோரிக்கை

 

ஈரோடு, ஜூலை 7: ஈரோடு மாநகராட்சி, 19வது வார்டில் உள்ளது நல்லிதோட்டம் பழையபாளையம் இணைப்புச்சாலை போஸ்டல் நகர், முதல் வீதி. தொடங்கும் இடத்தின் அருகில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர், குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய சாலையில் குழி தோண்டப்பட்டு பழுது நீக்கப்பட்ட து. தொடர்ந்து, குடிநீர் இணைப்புக்காக நல்லிதோட்டம் பழையபாளையம் இணைப்புச்சாலை குறுக்காக தார் சாலை தோண்டப்பட்டு குடி நீர் இணைப்பு வங்கப்பட்டது.

ஆனால், அதன் பின்னர் தற்போது வரை அந்த சாலையில் தோண்டப்பட்ட இடத்தில் மீண்டும் தார்சலை அமைத்து சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் முதல், சாலையில் நடந்து செல்பவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், பள்ளி வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள், லாரி என கனரக வாகனங்கள் முதற்கொண்டு இந்த சாலையில் சென்று வருவதால் பள்ளம் மேலும் அதிகமாகி கார்களின் டயர் பாதியளவுக்கு மூழ்கும் அளவுக்கு குழியாகி உள்ளது. இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது, அதன் ஆழம் தெரியாமல் வாகனங்கள் அந்த குழியில் ஏறி, இறங்கும் போது, வாகனங்கள் அடிப்பட்டு பழுதாகி வருகின்றன. மேலும், இருசக்கர வாகனங்களில் வரும் முதியவர்கள் உள்ளிட்ட பலரும் கீழே விழும் அபாயமும் நிலவி வருகிறது. எனவே, அந்த பள்ளத்தை சரி செய்து, சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.