தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலூத்து கிராமத்திற்கு பஸ் வசதி வேண்டி கோரிக்கை

 

Advertisement

வருசநாடு, ஜூன் 8: கடமலை-மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு அருகே பாலூத்து மலைக் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தேனி பிரதான சாலையில் இருந்து பாலூத்து கிராமம் வரை தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பாலூத்து கிராமத்தில் தொடக்கப்பள்ளி மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் கடமலைக்குண்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

பாலூத்து கிராமத்துக்கு பஸ் வசதி கிடையாது. எனவே மாணவ-மாணவிகள் தினமும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு நடந்தே சென்று வருகின்றனர். பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக, காலை 8 மணிக்கே மாணவ-மாணவிகள் தங்களது வீடுகளில் இருந்து புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி முடிந்து வீட்டுக்கு வர மாலை 6 மணிக்கு மேல் ஆகி விடுகிறது. எனவே பாலூத்து கிராமத்துக்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைக்கருத்தில் கொண்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலை, மாலை வேளைகளில், பாலூத்து கிராமம் வரை அரசு பஸ் இயக்கப்பட்டது. இது மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் வழக்கம் போல பள்ளிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பாலூத்து கிராமத்துக்கு மீண்டும் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

Related News