தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.3.90 லட்சம் மதிப்பீட்டில் பழுதான மேல்நிலை குடிநீர் தொட்டி சீரமைக்கும் பணி

ஈரோடு, ஜூன் 23: ஈரோடு காந்திபுரத்தில் ரூ.3.90 லட்சம் மதிப்பீட்டில் பழுதான மேல்நிலை குடிநீர் தொட்டி சீரமைக்கும் பணி நேற்று துவங்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி 1வது மண்டலம் 6வது வார்டுக்கு உட்பட்ட காந்திநகரில் 700க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மாநகராட்சி மூலம் குடிநீரானது காந்தி நகரில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் நீரேற்றம் செய்யப்பட்டு, குடிநீர் குழாய்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆங்காங்கே சிதலமடைந்தும், நீர் கசிந்தும் பழுதடைந்து காணப்பட்டது. இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

Advertisement

இந்த கோரிக்கையை ஏற்ற மாநகராட்சி நிர்வாகம் காந்தி நகர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சீரமைக்க பொது நிதியில் இருந்து ரூ.3.90 லட்சம் ஒதுக்கியது. இதன்பேரில், பழுதான மேல்நிலை நீர் தேக்க தொட்டி சீரமைக்கும் கட்டுமான பணி துவக்க விழா நடந்தது. இதில், 6வது வார்டு கவுன்சிலர் தமிழ்பிரியன் தலைமையில், மாநகராட்சி 1வது மண்டல தலைவர் பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பணியை தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திமுக பகுதி அவை தலைவர் சண்முக பிரியன், மாநகர விவசாய அணி அமைப்பாளர் இளங்கோ, பகுதி துணை செயலாளர் மங்கையர்கரசி மற்றும் வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News