தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பவானி ஆற்றினை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள் அகற்றம்

 

Advertisement

பவானி,ஜூன்10: பவானி ஆற்றில் கூடுதுறை முதல் காலிங்கராயன் அணைக்கட்டு வரையில் ஆகாயத்தாமரை வளர்ந்து, தண்ணீரின் மேற்பரப்பை ஆக்கிரமித்துள்ளது.இதனால், ஆற்றில் நீரோட்டம் பாதிக்கப்படுவதோடு, அடர்ந்து வளர்ந்த ஆகாயத் தாமரைகளுக்கு மத்தியில் பரிசலில் சென்று மீனவர்கள் மீன்கள் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பவானி ஆற்றில் நீரோட்டம் இல்லாததால் ஆகாயத்தாமரைகள் வெளியேறாமல் தேங்குவதால், அடர்ந்து வளர்ந்து வந்தது.

மேலும், கரையோரப் பகுதிகளிலும் சிறு செடிகள், மரங்கள் வளர்ந்து புதர் போன்று காணப்பட்டது. இதனால், பவானி ஆற்றை முற்றிலும் ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, நீர்வள ஆதாரத் துறை சார்பில் ஆற்றின் கரையோரங்களில் சுத்தம் செய்யவும், ஆகாயத்தாமரைகளை அகற்றவும் முடிவு செய்யப்பட்டது.

ராட்சத ஜேசிபி இயந்திரம் பவானி ஆற்றில் இறக்கப்பட்டு, கூடுதுறை முதல் கரையோரப் பகுதிகளில் அடர்ந்து வளர்ந்திருந்த புதர்கள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஆற்றுக்குள் தண்ணீரில் தேங்கி நிற்கும் ஆகாய தாமரைகளை இழுத்து அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. கூடுதுறை தொடங்கி பவானி பாலம், பழைய பஸ் நிலையம் வழியாக காலிங்கராயன் அணைக்கட்டு வரையில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் ஆகாயத்தாமரைகள் பவானி பழைய பாலத்தின் வழியே வெளியேற முடியாமல் அடைத்துக் கொள்வதும், பின்னர் அதனை அகற்ற முடியாமல் சிரமப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இந்நிலை ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தற்போது தொடங்கி உள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement