தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூங்கா சாலையோர கால்வாயில் குவிந்திருந்த மண், கழிவுகள் அகற்றம்: மசினக்குடியில் அவசர ஆலோசனை

 

Advertisement

ஊட்டி,ஜூன்3: ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையோர கால்வாய்களில் குவிந்திருந்த மண் மற்றும் கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று முன்தினம் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கனமழை கொட்டியது. கனமழை காரணமாக ஊட்டி ரயில் நிலையம் அருகே கூட்ெஷட் பகுதி, படகு இல்ல சாலை, சேரிங்கிராஸ், பூங்கா சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே என பல்வேறு தாழ்வான இடங்களிலும் மழைநீர் சூழ்ந்தது.

இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.இந்நிலையில் மழைநீர் தேங்கி இருந்த இடங்களில் ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையோரத்தில் உள்ள சிறு சிறு கால்வாயில் குவிந்து இருந்த மண் மற்றும் கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி தூய்மைப்படுத்தினர்.இதேபோல் ஊட்டி நகரின் பல்வேறு பகுதிகளிலும் கழிவுநீர் கால்வாய்கள் மண் குவிந்து காட்சியளிக்கின்றன. இவற்றையும் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

Related News