தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை, அண்ணாநகரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை

 

Advertisement

மதுரை, அக். 4: மதுரை அண்ணாநகர் பகுதியில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 40க்கும் அதிகமான கடைகளை மாநகராட்சியினர் அகற்றினர். மதுரையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகனங்கள், பொதுமக்கள் சென்று வர வசதி ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி நேற்று மதுரை மாநகராட்சியின் 35வது வார்டில் அண்ணாநகர் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மாநகராட்சியினர் பொக்லைன் உள்ளிட்ட வாகனங்கள், பணியாளர்களுடன் சென்று அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினர்.

இதன்படி அண்ணாநகர் மெயின் ரோட்டில் சுகுணா ஸ்டோர், கோல்சா காம்ப்ளக்ஸ், யானை குழாய் பகுதிகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். இதன்படி சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்திருந்த 40க்கும் அதிகமான கடைகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். இப்பகுதியில் மீண்டும் ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால், அவை உடனடியாக அகற்றப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

Advertisement

Related News