தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணி ம.பொ.சி சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திருத்தணி, ஜூன் 11: திருத்தணி ம.பொ.சி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறான சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன. திருத்தணி ம.பொ.சி சாலையில் பெருந்தலைவர் காமராஜர் மார்க்கெட் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, சமீபத்தில் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். இந்த, புதிய கட்டிடத்தில் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதனால், ம.பொ.சி சாலை காமராஜர் மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையை அகலப்படுத்தி போக்குவரத்துக்கு பாதிப்பின்றி வசதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்த, காமராஜர் மார்க்கெட் கடைகளுக்கு எதிரில் நெடுஞ்சாலை ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோர வியாபாரிகள் கடைகள் வைத்து, வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், காமராஜர் மார்க்கெட்டில் நகராட்சிக்கு வாடகை செலுத்தி வியாபாரம் செய்பவர்கள் சாலை ஆக்கிரமிப்பு கடைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காமராஜர் மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் மு.பிரதாப்பிடம் புகார் மனு அளித்தனர். இந்தநிலையில் கலெக்டர் உத்தரவின்பேரில் நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஞான அருள்ராஜ், வருவாய் ஆய்வாளர் கணேஷ்குமார், சாலை ஆய்வாளர் கணேஷ் ஆகியோர் முன்னிலையில் போலீசார் பாதுகாப்புடன் நேற்று சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News