தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரம்பலூரிலிருந்து ரூ.23.50 லட்சம் நிவாரணப் பொருட்கள்

பெரம்பலூர், டிச.5: விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ23.50லட்சம் மதிப்பிலான 19 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 2,000 பைகள் கொண்ட நிவாரண பொருட்களை பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அனுப்பி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பெறப்பட்ட ரூ23.50 லட்சம் மதிப்பிலான 19 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 2,000 பைகள் கொண்ட நிவாரண பொருட்களை பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேற்று (4ஆம்தேதி) விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மற்றும் மழைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்தார்.

Advertisement

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின்னர் வங்கக் கடலில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணா மலை, கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்ததால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. அதற்காக தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக புயலால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பெறப்பட்ட ரூ23.50 லட்சம் மதிப்பீட்டிலான அரிசி 5 கிலோ,

துவரம் பருப்பு 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, சமையல் எண்ணெய் 1 லிட்டர், கோதுமை மாவு 1 கிலோ, ரசப்பொடி, புளி, மஞ்சள் தூள் உள்ளிட்ட 19 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 2,000 பைகள் கொண்ட நிவாரண உதவி பொருட்களை 4 லாரிகள் மூலமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தார். கொண்டு செல்லும் நிவாரணப் பொருட்களை விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிட மாவட்டக் கலெக்டர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தேவநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News