தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதுமலையில் பூத்துக்குலுங்கும் சிவப்பு கொன்றை மலர்கள்

 

Advertisement

ஊட்டி, ஏப். 10: முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பூத்துள்ள சிவப்பு கொன்றை மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தாவரவியல் பூங்கா உட்பட பல்வேறு பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களில் பல்வேறு வகையான மலர்கள் காணப்படும். பல வண்ணங்களை கொண்ட இந்த மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

இதுமட்டுமின்றி, நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது வனங்களிலும், வனங்களை ஒட்டியுள்ள சாலையோரங்களில் பல்வேறு வகையான மலர்கள் மரங்களில் பூத்துக்காணப்படும்.

இது சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. குறிப்பாக, சேவல் கொண்டை மலர்கள், கொன்றை மலர்கள், நீல நிற ஜெகரண்டா மலர்கள், பிளேம் ஆப் தி பாரஸ்ட் போன்ற மலர்கள் அவ்வப்போது பூத்துக் காணப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு பகுதியில் ஏராளமான மயில் கொன்றை மரங்கள் உள்ளன.

ஆண்டு தோறும், கோடைகாலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த மரங்களில் சிறப்பு நிறுத்தில் மலர்கள் பூத்துக்காணப்படும். இந்த மலர்கள் சாலையோரங்களில் கொட்டி கிடக்கும். தற்போது இங்குள்ள மரங்களில் இந்த மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. சாலையோரங்களில் இரு புறங்களிலும் இந்த மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் முதுமலை வழியாக செல்லும் பொதுமக்களும் இந்த மலர்களின் அழகை ரசித்து செல்கின்றனர்.

Advertisement

Related News