தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் அரிசி

கோவை, ஜூன் 19: கோவை மாவட்டத்தில் 1,405 ரேஷன் கடைகள் செயல்படுகிறது. சுமார் 11 லட்சம் ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. மாவட்ட அளவில், பல்வேறு தொழில் நிறுவனங்களில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரள மாநிலத்தை சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். பிற மாவட்ட தொழிலாளர்களும் அதிகமாக வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் பலர் ரேஷன் அட்டை வைத்துள்ளனர். சொந்த ஊர் முகவரியில், அந்த பகுதி கடையில் ரேஷன் கார்டு இருக்கிறது. இவர்கள் கோவையில் வேலை செய்யும் பகுதி, தங்குமிடம் அருகேயுள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவர்களில் சிலருக்கு ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் கார்டு வைத்துள்ளவர்களுக்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் பிற மாநிலத்தினருக்கு ரேஷன் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல ஆயிரம் வெளி மாநில ெதாழிலாளர்கள் கோவை மாவட்டத்தில் ரேஷன் கார்டுகள் மூலமாக அரிசி வாங்கி வருவதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement