தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எலி செத்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு வாந்தி மயக்கம்

சென்னை: எலி செத்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூதாட்டி உட்பட 8 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாப்பூர் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னக்குழந்தை (88). இவர் தனது மகன், பேர பிள்ளைகள் என 8 பேருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு, வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் ஒருவரின் இறப்புக்கு சென்று விட்டு வந்தனர். நேற்று முன்தினம் இரவு சமையல் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டனர். பிறகு சமையல் எண்ணெய் வைத்திருந்த கேனை பார்த்த போது, அதில் எலி ஒன்று இறந்து அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
Advertisement

அதேநேரம் உணவு சாப்பிட்ட மூதாட்டி சின்னக்குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினரை சேர்ந்த ஹேமந்த், ஸ்ரீ ஹேமந்த் சாய், மணிகண்டன், பிரியா, விமலா, சரண், விமல் ராஜ் ஆகிய 8 பேருக்கும் அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மூதாட்டி உட்பட 8 பேரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அனைவருக்கும் டாக்டர்கள் விஷ முறிவு மருந்து அளித்து சிகிச்சை அளித்தனர். அதில் 4 பேர் வீடு திரும்பினர், மற்றவர்கள் மருத்துவமனையில் உள் நோயாளிகளான அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் மயிலாப்பூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement