தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு பள்ளி மாணவர்களுக்கு வண்ண சீருடை அறிமுகம்

திருவாடானை, செப்.25: திருவாடானை அரசு தொடக்கப் பள்ளியில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக புதிய வண்ண சீருடை வழங்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவாடானை தாலுகா அலுவலகம் அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் 63 மாணவ, மாணவிகளுக்கு, பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் புதிய வண்ண சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக, வாரத்தின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வண்ண சீருடை அணியும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதுவரை, இந்த பள்ளியின் மாணவர்கள் வாரம் முழுவதும் ஒரே நிற சீருடை அணிந்து வந்தனர். இதனை மாற்றி, மாணவர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், வண்ண சீருடைகளை வழங்க பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் முடிவு செய்தனர். இதற்கான முயற்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கதிரவன் முழு ஆதரவு அளித்தார்.

இந்த புதிய வண்ண சீருடை வழங்கும் நிகழ்வு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதோடு, மாணவர்களின் மனதிலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் எனப் பலரும் பாராட்டினர்.

 

Advertisement

Related News