தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலாடி அருகே சோகம் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

சாயல்குடி, செப். 19: கடலாடி அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலாடி அருகே ஒருவனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மாயக்கண்ணன். இவர் அங்கு புதிதாக வீடு கட்டி வருகிறார். அங்கு கட்டுமானப் பணிக்காக கம்பி அறுத்தல் உள்ளிட்ட பயன்பாட்டிற்காக மின்சாரத்தை தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த மாயக்கண்ணனின் மகன் ஆதிரன்(2), தெரியாமல் மின்வயரில் மிதித்தாக கூறப்படுகிறது. அப்போது மின்வயரில் இருந்த பழுது காரணமாக மின்சாரம் தாக்கியதில் சிறுவன் துடித்துடித்து மயங்கி விழுந்தான். இதனை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக ஆதிரனை மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து இளஞ்செம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement