தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கும்பரம் ஊராட்சி பகுதியில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு

ராமநாதபுரம், ஆக.18: உச்சிப்புளி அருகே கும்பரம் ஊராட்சியில் கும்பரம், ராமன் வலசை, பூசாரி வலசை, ஏ,டி.நகர், கோகுல் நகர், கல்கண்டு வலசை, கிருஷ்ணா நகர், கும்பரம் வடக்கு, கும்பரம் தெற்கு, மற்றும் படைவெட்டி வலசை, மணியக்கார வலசை கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

Advertisement

கூட்டத்திற்கு சிவானந்தம் தலைமை வகித்தார். ஆறுமுகம், ராமு, பாலகிருஷ்ணன், தங்கச்சாமி, ராஜேஸ்வரி, கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் முத்துராமு, தாலுகா செயலாளர் கல்யாணசுந்தரம், கதிர்வேல் பேசினர். இதில், கும்பரம் பகுதியில் சுமார் 3 லட்சம் தென்னை மரங்களும், சுமார் 10 லட்சம் பனை மரங்களும் உள்ளன.

நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துப்பயிர் வகை பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இப்பகுதியில் விமானநிலையம் அமைக்க நிலம் தேர்வு செய்வதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் விமான நிலையம் அமைந்தால் சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுவர். எனவே இந்தப் பகுதியில் விமான நிலையத்திற்கு நிலம் தேர்வு செய்வதை தவிர்த்து மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது.

 

Advertisement