தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மண்டபம் அரசு பள்ளியில் மழைநீர் வெளியேற்றும் பணி 2வது நாளாக தீவிரம்

மண்டபம், டிச. 4: மண்டபத்தில் பெய்த கனமழையால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் 2வது நாளான தீவிரமாக ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதியான மண்டபம் பேரூராட்சியில் டிட்வா புயலின் தாக்கத்தால் கடந்த நவ.26ம் தேதி முதல் நவ.30ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களாக கடுமையான மழை பெய்தது. இதனால் மண்டபம் நகரில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் சுமார் 3 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. இதனால் மாணவிகள் வகுப்பறைகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். மேலும் பள்ளி வளாகத்தை சுற்றி தனியார் நிலம், வீடுகள் இருப்பதால் தேங்கிய மழைநீரை வெளியில் கடத்துவது சிரமமாக இருந்தது. மேலும் வெயில் அடித்தால் மட்டுமே மழைநீர் காயும் சூழ்நிலை இருந்தது. இதுகுறித்து மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், இளநிலை உதவியாளர் முனியசாமி ஆகியோர் ஆய்வு நடத்தி மழைநீரை வெளியேற்ற முடிவு செய்தனர். இதற்காக நேற்று முன்தினம் பிளாஸ்டிக் ஓசுகள் உள்பட கூடுதலான உபகரணங்களை வாங்கி சக்திவாய்ந்த ராட்சத மோட்டார்கள் மூலம் பள்ளி வாளகத்தில் தேங்கிய மழைநீரை கடல் பக்கம் வெளியேற்றும் பணியை பேரூராட்சி பணியாளர்கள் துவக்கினர். தொடர்ந்து நேற்று 2வது நாளாக மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

Related News