தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாடானை அருகே மகளிர் சுகாதார வளாகம் சேதம் புதிதாக கட்ட மக்கள் கோரிக்கை

திருவாடானை, டிச.4: திருவாடானை அருகே முட்புதர்கள் மண்டி சேதமடைந்த மகளிர் சுகாதார வளாகத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

திருவாடானை அருகே பாண்டுகுடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த மகளிர் சுகாதார வளாகக் கட்டிடம் உரிய பராமரிப்பு இன்றி பயன்பாடு இல்லாமல் இருந்தது. இதனால் இந்த கட்டிட வளாகத்தின் உள்பகுதியில் முட்புதர்கள் மண்டி மரங்கள் வளர்ந்துள்ளன. மரங்களின் வேர்கள் கட்டிடத்தை சேதப்படுத்திவிட்டன.

மேலும் இந்த சுகாதார வளாகத்திற்குள் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட கழிவறைகளின் கதவுகள் உடைந்து சேதமடைந்துவிட்டன. மழைக்காலங்களில் சுகாதார வளாகத்தின் சுவர்களில் மழைநீர் இறங்கியதால் ஊறல் ஏற்பட்டு விரிசல் அடைந்துள்ளது. இதனால் சுகாதார வளாகம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் பயன்பாடின்றி கிடக்கும் சுகாதார வளாகக் கட்டிடத்தில் இரவு நேரங்களில் சிலர் மது அருந்திவிட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே பயன்பாடின்றி முட்புதர்கள் மண்டிய நிலையில் சேதமடைந்துள்ள சுகாதார வளாகக் கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News