தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பகுதிநேர ரேஷன் கடை திறக்க வலியுறுத்தல்

திருவாடானை, நவ.28: திருவாடானை அருகே கூகுடி பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடை மூலம் கூகுடி, அறிவித்தி, அந்திவயல், அறநூற்றிவயல் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 450க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது நுகர்பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் அறிவித்தி, அந்திவயல் மற்றும் அறநூற்றிவயல் உள்ளிட்ட மூன்று கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள கூகுடி பகுதியில் செயல்படும் இந்த ரேஷன் கடைக்கு ஒவ்வொரு மாதமும் நடந்து சென்று நீண்ட நேரம் கால்கடுக்க காத்திருந்து பொருட்களை வாங்கி செல்லும் சூழல் உள்ளது.

Advertisement

மேலும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த ரேஷன் கடைக்கு தங்களது நுகர் பொருட்களை வாங்கச் செல்லும் இந்த மூன்று கிராம மக்கள் அன்றைய தினத்தன்று கூலி வேலைக்கு செல்லமுடியாது. இந்நிலையில் கடந்த சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மூன்று கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், அந்திவயல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் ஒரு சில மாதங்கள் மட்டும் பகுதிநேர ரேஷன் கடை செயல்பட்டுள்ளது.

அந்த பகுதிநேர ரேஷன் கடை செயல்பட்ட தனியாருக்கு சொந்தமான கட்டிடம் சேதமடைந்து விட்டதால், அந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டனர். இதனால் ஒரு சில மாதங்களிலேயே அங்கு செயல்பட்ட பகுதிநேர ரேஷன் கடை மூடப்பட்டது. ஆகையால் சுமார் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள கூகுடி பகுதிக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் அந்திவயல் பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்து, அதில் மூடப்பட்ட பகுதிநேர ரேஷன் கடையை மீண்டும் திறக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement