தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மரைக்காயர்பட்டிணம் ஊராட்சியை மண்டபம் பேரூராட்சியுடன் இணைக்க மக்கள் எதிர்ப்பு

மண்டபம்,நவ.28: மண்டபம் ஒன்றியம் மரைக்காயர் பட்டிணம் ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பைரோஸ் ஆசியம்மாள் தலைமை வகித்தார். இதை தொடர்ந்து ஊராட்சியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் நடைபெற்று முடிந்த திட்டப்பணிகள் குறித்து விவாதம் செய்யப்பட்டு திட்ட அறிக்கைகளை ஊராட்சி செயலர் நாகேந்திரன் பொதுமக்கள் மத்தியில் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பொருளாதாரம் இன்றி வசித்து வரும் மீனவ மக்கள் வசிக்கக்கூடிய மரைக்காயர்பட்டிணம் ஊராட்சியை மண்டபம் பேரூராட்சியுடன் இணைப்பதற்கு அரசு எடுக்கும் முயற்சி கைவிடவேண்டும்.

Advertisement

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து பெய்து வரும் கனமழையால் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் மழைநீர் தேங்காமல் உடனடியாக அகற்ற வேண்டும்.அதுபோல அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்துள்ளதால், அதற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கும். அதுபோல அரசு துவக்கப்பள்ளியில் மாணவ,மாணவிகள் அதிகமாக சேர்ந்து உள்ளதால் வகுப்பறை பற்றாக்குறையை போக்க கூடுதல் வகுப்பறைகள் கட்டிடம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மரைக்காயர் பட்டிணம் ஊராட்சி பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்துகள் அனைத்தும் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட ஊராட்சியின் வளர்ச்சிகளுக்கு ஏற்ப பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement