தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு நடுநிலைப்பள்ளியில் களைகட்டிய இயற்கை உணவு திருவிழா: மாணவ, மாணவிகள் அசத்தல்

ராமேஸ்வரம், நவ. 26: ராமேஸ்வரம் வர்த்தகன் தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி எண்.1ல் நேற்று இயற்கை உணவு திருவிழா மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் இராமநாதன் தலைமை வகித்தார். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் தங்களின் வீடுகளில் செய்த இயற்கை உணவுகளை சுவைக்கு வைத்தனர். இதிலல் 300க்கும் மேற்பட்ட சிறுதானிய உணவுகள் வைக்கப்பட்டிருந்தன.

Advertisement

இதில் முருங்கை, வெற்றிலை, துளசி அல்வா சிறப்பு இடம் பெற்றிருந்தது. மேலும் கம்பு, கேழ்வரகு, சோளம், கடலை, பருப்பு உள்ளிட்ட சிறுதானியங்களில் செய்யப்பட்ட பல்வேறு வகையான உணவு பண்டங்கள் வைத்து அசத்தினர். இதை தொடர்ந்து நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் தங்களின் சொந்த முயற்சியால் உருவாக்கிய படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிவது, சந்திராயன் 3 இயங்கும் விதம், மழைநீர் சேகரிப்பு, காற்று மாசுபடுதலை தவிர்த்தல் ஆகியவற்றை குறித்த 50க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தி செயல்முறை விளக்கம் அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி செய்தார். ஆசிரியர்கள் வீரசுந்தரி, சரண்யா, முகமது பத்தாக், சரண் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் முரளீஸ்வரன் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement