இலுப்பக்குடியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சிவகங்கை, செப்.22: கலெக்டர் பொற்கொடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் சிவகங்கை மாவட்டத்தில் ஜூலை 15 முதல் நடைபெற்று வருகிறது. இம்மாதம் வரை ஒவ்வொரு வாரமும், நான்கு நாட்களில் நாள் ஒன்றுக்கு 6 முகாம் வீதம் மொத்தம் 215 முகாம்கள் நடைபெறவுள்ளது.அதன்படி நாளை காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள இலுப்பக்குடி ஊராட்சி பகுதிகளுக்கு லெட்சுமி நகர் சமுதாயக்கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இதில் பட்டாவில் பெயர் மாற்றம் மற்றும் பட்டா பெயர் திருத்தம், பட்டா சிட்டா நகல், பிறப்பு, இறப்பு சான்று வாரிசு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட மனுக்களுக்கு இம்முகாமில் உடனடி தீர்வு காணும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மனு அளித்திட விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகளும் இம்முகாம்களில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு மனு அளிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.