தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கீழக்கரையில் 33 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

கீழக்கரை, டிச.11: கீழக்கரையில் வாகனத்தில் கடத்திச் சென்ற 33 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக கடலோர பகுதிகளில் கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்த கடலோரப் பாதுகாப்புக் குழும கூடுதல் காவல்துறை இயக்குநர் அறிவுறுத்தலின் பேரில் கடற்காவல் நிலையங்கள் தோறும் சிறப்புப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு சார்பு ஆய்வாளர் கண்ணன், நுண்ணறிவு பிரிவு காவலர் மதியழகன் உள்ளிட்ட போலீசார் கடத்தல் தடுப்பு சம்பந்தமாக ஏர்வாடி கிழக்கு கடற்கரை சாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

Advertisement

அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்து கொண்டிருந்த வாகனத்தை நிறுத்த முயன்றபோது நிற்காமல் சென்றது. அந்த வாகனத்தை துரத்திச் சென்று பிடித்த போது அதிலிருந்த 2 பேர் தப்பினர். வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 33 மூட்டைகளில் இருந்த ரேஷன் அரிசியை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் தப்பியோடியது கொட்டகை புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் பாலசுப்ரமணியம், ராமர் மகன் மாரிநாதன் என தெரிய வந்தது. கைப்பற்றிய 33 மூட்டைகளில் இருந்த 1,500 கிலோ அரிசி ராமநாதபுரம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Related News