தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்புத்தூரில் கோலாகலம் அமல அன்னை ஆலய தேர்பவனி

 

Advertisement

திருப்புத்தூர், டிச.8: திருப்புத்தூரில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் சப்பரம் பவனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த நவ.29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8ம் நாளான நேற்று முன்தினம் இரவு திருப்புத்தூர் பங்குத்தந்தை அற்புதஅரசு தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து விழாவையொட்டி ஆலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று சப்பரங்களும் மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அலங்கரிக்கப்பட்ட முதல் சப்பரத்தில் புனித மைக்கேல் அதி தூதர் சொரூபமும், மற்றொரு சப்பரத்தில் புனித அமல அன்னை சொரூபமும் வைக்கப்பட்டு ஆலயத்திலிருந்து தேர் பவனி தொடங்கியது. முன்னதாக சப்பரங்களில் தோன்றிய சொரூபங்களுக்கு தூபம் காட்டப்பட்டு, புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்பு பிரசங்கம் செய்யப்பட்டு, அன்னையின் திரு உருவ சொரூபம் தாங்கிய சப்பரம் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு அஞ்சலக வீதி, பேருந்து நிலையம், காரைக்குடி சாலை, தேரோடும் வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக, அமல அன்னையின் பாடல் ஒலித்தவாறு, வாண வேடிக்கைகள் முழங்க பவனி வந்து மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. இதில் சப்பரத்திற்கு முன்பாக நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் அனைவரும் ஊர்வலமாக வந்து வழிபட்டனர்.

Advertisement

Related News