தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரை ஓரங்களில் மீன்பிடிப்பால் பிரச்னை: மரைன் போலீசார் சமரசம்

தொண்டி, ஆக.4: தொண்டி அருகே நம்புதாளையில் விசைப்படகு மீனவர்கள் கரை ஓரங்களில் மீன் பிடித்ததால் நாட்டு படகு மீனவர்களுடன் பிரச்னை ஏற்பட்டதால் மரைன் போலீசார் சமரசப்படுத்தினர். விசைப்படகு மீனவர்கள் கடலில் ஆழப் பகுதியில் மீன் பிடிக்க வேண்டும் என்பது விதி. மேலும் இரட்டைமடி, சுருக்கு மடி இழுவை வலை போன்றவற்றை பயன் மீன் பிடிக்க கூடாது. இருப்பினும் தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் விதிமுறை மீறுவதாக புகார் எழுந்தது.

Advertisement

இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் கரை ஒரங்களில் மீன் பிடிக்க கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மரைன் போலீசார் சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு செய்தனர். இந்நிலையில் நேற்று சோழியக்குடி லாஞ்சியடி பகுதி விசைப்படகு மீனவர்கள் சிலர் கரை ஒரங்களில் இழுவை வலையை பயன்படுத்தி மீன் பிடித்துள்ளனர். இதை பார்த்த நம்புதாளை மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளை சிறைபிடித்தனர். இதனால் இரு தரப்பு மீனவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மரைன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

Advertisement

Related News