தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அபாயகரமான வளைவுகளால் சென்டர் மீடியன் அமைக்க கோரிக்கை

திருவாடானை, செப்.3:திருவாடானை பேருந்து நிலையம் வழியாக செல்லும் தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துணைக்காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகிலும், திரெளபதி அம்மன் கோவில் அருகிலும் இரு அபாயகரமான வளைவுகள் உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை பிரதான சாலை என்பதால், அடிக்கடி இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் இந்த இரு அபாயகரமான வளைவுகளில் வரும்போது எதிரே வரும் வாகனத்தை கணிக்க முடியாமல் நேருக்குநேர் மோதி விபத்தில் சிக்குகின்றனர்.

Advertisement

மேலும் இந்த பிரதான சாலையில் உள்ள அபாயகரமான வளைவுகளில் வரும்போது, ஒரு சில வாகன ஓட்டிகள் கவனக் குறைவாகவும், அதிவேகமாகவும் வந்து இந்த இரு இடங்களிலும் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். இதனால் அப்பகுதியில் தினசரி பயணிக்கும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பாதசாரிகளும் ஒருவித அச்சத்துடன் செல்வதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆகையால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரு ஆபத்தான வளைவுகளிலும், சாலையின் நடுவே சிறிய சென்டர் மீடியன் அமைக்க வேண்டுமென அப்பகுதி வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: இந்த தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரு ஆபத்தான வளைவுகளில் வாகனத்தை ஓட்டி செல்லும்போது எதிர் திசையில் வரும் வாகனத்தை கணிக்க முடியாமல் ஒரு சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு விடுகிறது. மேலும் இந்த பகுதிகளில் பொதுப்பணித் துறை அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், அரசு தாலுகா மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காவல் நிலையம் உட்பட ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளது. மற்றொரு பகுதியில் தனியார் பள்ளி, தர்மர் கோவில் உள்ளிட்ட இடங்கள் உள்ளது.

இந்த இரு ஆபத்தான வளைவுகள் உள்ள இடங்களில் அடிக்கடி மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இவ்வழியாக வாகனங்களில் செல்வோர் எதிர் திசையில் வரும் வாகனங்களை கணிக்க முடியாமல் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். மேலும் அவ்வழியாக நடந்து செல்லும் பாதசாரிகளும், வாகனங்களில் செல்வோரும் ஒருவித அச்சத்துடன் இந்த ஆபத்தான வளைவுகளை கடந்து செல்கின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் இரு ஆபத்தான வளைவுகளின் நடுவே சிறிய சென்டர் மீடியன் அமைக்க வேண்டுமெனக் கூறினர்.

Advertisement

Related News