தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குமரி கடலுக்குள் விழுந்து மாயமான மீனவரை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் முதல்வருக்கு ராஜேஷ்குமார் எம்எல்ஏ கடிதம்

கருங்கல், ஜூன் 4: கடலில் விழுந்து மாயமான மீனவரை தேடும் பணியை தீவிரப்படுத்தவேண்டும் என்று கோரி ராஜேஷ்குமார் எம்எல்ஏ தமிழ்நாடு முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீன்வளம் - மீனவர் நலத்துறை அமைச்சர், குமரி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு, ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இனையம் பகுதியை சேர்ந்தவர் லேனடிமை (48). இவர் தனக்கு சொந்தமான கட்டு மரத்தில் ஜூன் 1 ம் தேதி மாலை தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலில் சென்றார். அவர் நேற்று முன்தினம் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் கரை திரும்பாததால் அவரது குடும்பத்தார், மீனவர்கள் கடலில் தேடும் போது லேனடிமை கடலுக்குள் தவறி விழுந்து மாயமான நிலையில் மணக்குடி அருகே உள்ள பள்ளம் பகுதியில் அவரது கட்டு மரம் மட்டும் கடலில் மிதந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினர் பெரிதும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆகவே கடலோர காவல்படை, இந்திய கடற்படை இணைந்து போர்கால அடிப்படையில் தேடுதல் பணிகளை தீவிரபடுத்தி கட்டு மரத்தில் இருந்து கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Related News