தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க ஊசியை விழுங்கிய ரவுடி

பெரம்பூர்: போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க ஊசியை விழுங்கிய சரித்திர பதிவேடு ரவுடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெரம்பூர் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் (எ) மாட்டு தினேஷ் (30). இவர் மீது திருவிக நகர், பெரவள்ளூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் சில குற்ற வழக்குகள் உள்ளன. சரித்திர பதிவேடு ரவுடியாகவும் உள்ளார். நேற்று முன்தினம் இரவு கொளத்தூர் சிவசக்தி நகர் 2வது தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டிற்குச் சென்ற தினேஷ் அங்கு தங்கியுள்ளார்.
Advertisement

அவரது பாட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர், நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு ஊசியை விழுங்கிவிட்டதாகக் கூறி பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் நேற்று காலை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

தன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் செம்பியம் காவல் நிலைய போலீசார் தன்னை தேடி வருவதாகவும், அவர்கள் தன்னை பிடித்து விடுவார்கள் என்று நினைத்து போதையில் ஊசியை விழுங்கி விட்டதாகவும் தினேஷ் கூறியுள்ளார். தொடர்ந்து இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Advertisement

Related News