தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சாவூரில் செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்

 

Advertisement

தஞ்சாவூர், ஜூன் 21: தஞ்சாவூரில் செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் நாளை (22ம் தேதி) தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் செல்லப் பிராணிகள் வளர்க்கும் பொது மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி தஞ்சாவூரை அடுத்த மாதாக்கோட்டை சாலையில் இயங்கி வரும் பிராணிகள் வதை தடுப்பு சங்க கட்டிட வளாகத்தில் நாளை (22ம் தேதி) இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற உள்ளது.

இந்த முகாம் நாளை காலை 9 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெறுகிறது. முகாம் வருகிற 24ம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. முகாமில் செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. எனவே தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் செல்லப் பிராணிகள் வளர்ப்போர் தங்களின் செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி மருந்தினை செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக கலெக்டர் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement