தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருமுருகன்பூண்டி பகுதிகளில் வீடுகளில் விநியோகிக்கும் குடிநீரின் தரம் ஆய்வு

 

திருப்பூர், ஜூலை 23: திருப்பூர், திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் குடிநீர் விநியோகம் குறித்து நகராட்சி பொறியாளர் ராமசாமி தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இயக்குனர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் வீடுகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரம் மற்றும் அளவு, அழுத்தம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் நகராட்சி பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் 27 வார்டுகள் உள்ளது.

இந்த வார்டுகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி பொறியாளர் ராமசாமி, பொருத்துனர் ஜான்சன், நகராட்சி எலெக்ட்ரீசியன் ரவிக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் நகராட்சி 15, 16,18 ஆகிய வார்டு பகுதிகளில் உள்ள வீடுகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். அதேபோல் ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோல் தண்ணீரின் அழுத்தம் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.