தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கதிர் விட்ட சம்பா பயிர் முதலமைச்சரின் காலை, மதிய உணவுத் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம்

புதுக்கோட்டை, நவ.15: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா, தலைமையில் நேற்று நடைபெற்றது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கூறியதாவது,

Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மாணாக்கர்களின் கல்வி நலனில் மிகுந்த அக்கறைகொண்டு பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், மாணாக்கர்கள் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்டு கல்வி பயிலும் வகையில், தமிழக அரசின் சார்பில் மாணாக்கர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டுவரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.

இத்திட்டங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கண்காணித்து ஆய்வு செய்திட அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த ஆய்வுகளின் அடிப்படையில், குறைகள் ஏதுமிருப்பின் அதனை உடனடியாக நிவர்த்தி செய்திடுமாறு தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்றையதினம் நடைபெற்ற கூட்டத்தில், இத்திட்டங்கள் பள்ளிகளில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்தும், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சத்தான காலை உணவுகளை சரியான நேரத்திற்குள் வழங்குவது குறித்தும் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் கூட்டம் நடைபெற்றது.

எனவே, தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் இத்திட்டத்தினை மாணாக்கர்களிடம் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உரிய முறையில் கொண்டு சேர்த்திட வேண்டும் எனவும் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்.ஜெயசுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரேவதி, உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பாலசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News