தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞரிடமிருந்து பணத்தை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் டிரைவர்

திருமயம்.அக்.31: திருமயம் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞரிடமிருந்து மீட்கப்பட்ட பணத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தவருக்கு வெகுவாக பாராட்டினர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, நாட்டரசன் கோட்டை பகுதியைச் சேர்ந்த கணேசன், மகாதேவன் ஆகியோர் திருமயம் அருகே பைக்கில் வந்த போது லாரி மோதி படுகாயம் அடைந்தனர். இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மகாதேவன் பலத்த காயம் அடைந்து சுயநினைவின்றி கிடந்தார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் காயம் அடைந்த மகாதேவனையும், உயிரிழந்த கணேசனையும் மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது விபத்தில் சிக்கியவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் செவிலியர் மீட்டனர், பின்னர் திருமயம் அண்ணா அரசு தலைமை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி மூலம் திருமயம் போலீஸிடம் மீட்கப்பட்ட பணம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் விபத்தில் சிக்கியவர்களிடமிருந்து பெரிய அளவிலான தொகையை உறவினர்களிடம் ஒப்படைக்க உறுதுணையாக இருந்த திருமயம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, ஆம்புலன்ஸ் பைலட் ராஜா, கருப்பையா, செவிலியர்கள் வசந்தி, ரேவதி ஆகியோரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

 

Advertisement

Related News