சடையம்பட்டியில் விவசாய சங்க கொடியேற்று விழா
பொன்னமராவதி,அக்24: பொன்னமராவதி அருகே சடையம்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிளை கொடியேற்று விழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டி. அண்ணாநகர். கிராமங்களில். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புதிய கிளைஅமைத்து கொடிஏற்று நடைபெற்றது.
Advertisement
இதில் மாவட்டதலைவர் பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர் பகுருதீன். விவசாய சங்க ஒன்றியநிர்வாகிகள் பாண்டியன், சவுந்தர்ராஜன், சுந்தரராஜன், கோபாலன் உட்பட கிராமமக்கள் கிராம கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொன்டனர். இதில் மறவாமதுரை ஊராட்சிக்குட்பட்ட சடையம்பட்டி அண்ணாநகர் கிரமங்களில் குடியிருந்துவரும் மக்களுக்கு துரித நடவடிக்கை எடுத்து பட்டா வழங்கவேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் இயற்றப்பட்டது.
Advertisement