தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கறம்பக்குடி அருகே பழுதடைந்த பள்ளி ஓட்டு கட்டிடத்தை இடிக்க வேண்டும்

கறம்பக்குடி, நவ. 21: கறம்பக்குடி அருகே பழுதடைந்த பள்ளி ஓட்டு கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மீனம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 200 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் முதன் முதலாக பல ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப பள்ளி ஆரம்பிக்க பட்டு செயல்பட்டு வந்தது. அதன் பிறகு ஓட்டு கட்டிட பள்ளி மாற்றப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் ஓட்டு பள்ளி கட்டிடம் பழுடைந்து ஆங்காங்கே ஓடுகள் பெயர்ந்து காணப்பட்டது.

Advertisement

அங்கு மீனம்பட்டி ஆரம்ப பள்ளியானது நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்த பட்டு அதன் பிறகு புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வேறொரு இடத்தில் நடுநிலை பள்ளி முழுவதுமாக செயல்பட்டு வருகிறது. மீனம்பட்டி அங்கன் வாடி அருகே பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக காணப்படும் மீனம்பட்டி அரசு ஆரம்ப தொடக்க பள்ளி பழுதடைந்த ஓட்டு கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி அந்த இடத்தில் வேறொரு புதிய அரசு அலுவலக கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement