தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விராலிமலை பகுதிகளில் 220 மி.மீ மழை பொழிவு

விராலிமலை, அக்.13: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில் விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல்,குடுமியான்மலையில் நேற்று முன்தினம் இரவு 220 மில்லி மீட்டர் பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெய்த நிலையில் விராலிமலை பகுதிகளில் போதிய அளவு மழை பொழிவு இல்லாமல் பொய்த்து போனது இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று நினைத்திருத்த மக்களுக்கு ஏமாற்றமே மிச்சியது.

Advertisement

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி பெரும்பாலான பகுதிகளில் பெய்து வருகிறது. இந்த மழை வரும் டிசம்பர் வரை நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதில் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருமயத்தில் 68.60 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

மேலும்,அன்னவாசல் 67 மி.மீ, இலுப்பூர் 62 மி.மீ, குடுமியான்மலை 51.80 மி.மீ, விராலிமலை 39 மி.மீ என மொத்தம் 220 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது . இது சென்டி மீட்டர் அளவில் 22 ஆகும். தென்மேற்கு பருவமழை பொய்த்து போன நிலையில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்து நிலத்தடி அதிகரித்துள்ளது.

 

Advertisement