தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பொன்னமராவதியில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

பொன்னமராவதி, ஆக. 8: உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் வலையபட்டி பாப்பாயி ஆச்சி அரசு தாலுகா மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா நடந்தது. பொன்னமராவதி ராயல் லயன்ஸ் சங்க தலைவர் முத்தையா தலைமை வகித்தார். மண்டல தலைவர் முருகானந்தம், வட்டாரத் தலைவர் கிரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம், அதனால் தாய், குழந்தை இருவருக்கும் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கமாக, விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தலைமை மருத்துவர் செந்தமிழ் செல்வி பேசினார். கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது.

இதில் சாசன தலைவர் பழனியப்பன், 2ம் துணைத் தலைவர் ரத்தினம், செயலாளர் சுப்பையா, பொருளாளர் சங்கர் நிர்வாகிகள் மணிமுத்து, வெங்கடேசன், பழனியப்பன், சந்திரன் ,ராஜேந்திரன் , பழனியப்பன், கனகசபாபதி, ஆறுமுகம், கமலக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.