தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரயில் நிலையத்தில் தேங்கி நிற்கும் நெல் மூட்டைகள்

புதுக்கோட்டை, நவ.7: அரசு சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச்செல்ல லாரி இல்லாததால் தேங்கி நிற்கும் 2000 மெ.டன் நெல் மூட்டைகள் கூடுதல் வாகனம் இயக்க வலியுறுத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை ரயில்வே நிலையத்திற்கு 42 பெட்டிகளில் வந்த 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை அரசு சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பும் பணி நடைபெற்று வரக்கூடிய நிலையில் நெல் மூட்டைகளை ஏற்ற போதிய லாரிகள் இல்லாததால் பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறதுடெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிகள் முடிவடைந்து நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யபட்ட நெல்களை நேற்று திருவாரூர் மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை ரயில்வே நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் 42 பெட்டிகளில் 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் வந்திரங்கியது.

Advertisement

இந்நிலையில் அந்த நெல் மூட்டைகளை புதுக்கோட்டை மாவட்டம் கடையாத்துப்பட்டி மற்றும் துளையானுர் பகுதிகளில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்றுவருகிறது. இந் நிலையில் நெல் மூட்டைகளை ஏற்றிச்செல்ல போதிய லாரிகள் இல்லாததால் அந்த பணி தொய்வாக நடைபெற்று வருகிறது. திடீரென்று நெல் மூட்டைகள் வருகிறது என்று கூறியதால் போதிய லாரிகள் இல்லை என்றும் நெல் மூட்டைகளை ஏற்றி சென்று அரசு குடோனில் இறக்கும் லாரிகள் திரும்பி வந்தால் தான் மீதமுள்ள நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல முடியும் என்று இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement

Related News