தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கறம்பக்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

கறம்பக்குடி, ஆக.5: கறம்பக்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூடை பின்னும் தொழிலாளி இறந்தார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அடுத்த ஆத்தங்கரை விடுதி ஊராட்சி கீழவாண்டான் விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமயன்(56), கூடை பின்னும் தொழிலாளி. இவருக்கு, விஜயா என்ற மனைவியும், இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் கறம்பக்குடிக்கு கூடை விற்பனை செய்வதற்காக வருகை புரிந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அந்த வழியாக வந்தவர்கள் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று அவர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். கூடை பின்னும் தொழிலாளி ராமன் சிகிச்சை பலனின்றி நேற்று விடியற்காலை இறந்துவிட்டார். இது குறித்து, அவரது உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ராமனின் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.