தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுக்கோட்டை மின்வாரிய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

 

Advertisement

புதுக்கோட்டை, ஜூன் 19: புதுக்கோட்டை மின்வாரிய ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்காததால், அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பதவி உயர்வுக்கான ஆர்டர் வழங்கப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டனர்.

புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் 50க்கு மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி மின்வாரிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேச்சுவார்த்தை நடத்தி பதவி உயர்வுக்கான ஆணை நேற்று வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பதவி உயர்வு வழங்குவதில் வீண் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும் விரைவாக பதவி உயர்வு வழங்க கோரி 50க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மின்வாரிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆக்கமுகவர், முதல் நிலை பதவிகளுக்கான பதவி உயர்வு, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தவுடன் பதவி உயர்வு கிடைத்துவிடும் என காத்திருந்தனர்.

தேர்தல் விதிமுறைகள் முடிந்த பின்னும், மின்வாரிய ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. இதனால் உடனடியாக பதவி உயர்வை வழங்க வேண்டும் என கூறி புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுபட்டனர். இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்களிடம் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பதவி உயர்வுக்கான ஆணை வழங்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டது.

Advertisement

Related News