தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுக்கோட்டை மீன் மார்க்கெட் பகுதியில் 350 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்

புதுக்கோட்டை, நவ.28: புதுக்கோட்டை மீன் மார்க்கெட் பகுதியில் 350 கிலோ கெட்டுப்போன மீன்கள் விற்ற கடைகளுக்கு ரூ.6 ஆயிரம் அபதாரம் விதித்து மீண்டும் இது போன்று மீன்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன் கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர். புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மேல 3-ம் வீதி உள்ள மீன் மார்க்கெட், டி.வி.எஸ் பகுதியில் உள்ள மீன் கடைகள் என பல்வேறு இடங்களில் அதிக அளவில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கூடி ஆர்வத்துடன் மீன்களை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் கெட்டுப்போன மீன்களை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது என புதுக்கோட்டை மாநகராட்சி, மீன்வளத்துறை, புதுக்கோட்டை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

Advertisement

அதன்படி நேற்று மூன்று துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பத்துக்கு மேற்பட்டோர் புதுக்கோட்டை மீன் மார்க்கெட் மற்றும் டி.வி.எஸ் பகுதியில் உள்ள மீன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது சில கடைகளில் கெட்டுப்போன மீன்கள் பொதுமக்களுக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து உடனடியாக கெட்டுப்போன மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த கடைகளுக்கு முன்பே மருந்தை ஊற்றி மீன்களை அழித்தனர். மேலும் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபதாரம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். இந்த ஆய்வின் போது 350 கிலோ எடை கொண்ட கெட்டுப் போன மீன்கள் அழிக்கப்பட்டன. கெட்டுப் போன மீன்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இது போன்று மீன்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன் கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர். அதிகாரிகளின் இந்த நவடிக்கையால் புதுக்கோட்டை மீன் மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Advertisement