தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கந்தர்வகோட்டையில் சூரசம்கார திருவிழா கோலாகலம்

 

Advertisement

கந்தர்வகோட்டை, அக்.28: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்கார விழா நடைபெற்றது.

ஐப்பசி மாத வளர்பிறையில் சஷ்டி பெருவிழா முருகர் கோயில்களில் வெகு விமர்சையாக கொண்டாடுவர். அதில், முருகர் அறுபடைகளான பழனி, திருச்செந்தூர், திருத்தனி போன்ற கோயில்களிலும், மாநிலத்தின் பிற மாவட்டங்களிலுள்ள முருகர் கோயில்களிலும் கந்தர் சஷ்டி விழா கடந்த 5 நாட்களாக நடந்து வருகிறது. அதில், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்பிரகாரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 22ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி வள்ளி, தெய்வயானை சமேத மருகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு விழா நடைபெற்று வந்தது. கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்கார விழா திங்கட்கிழமை மாலை கோயில் வளாகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, வெற்றிவேல் வீரவேல் என பக்தி பரவசமூட்டும் முழக்கங்கள் எழுப்பி முருகனை வழிபட்டுச் சென்றனர். இன்று மாலை 6 மணியளவில் முருகர் திருகல்யாணம் நடக்கிறது.

 

Advertisement