தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கந்தர்வகோட்டையில் மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிராக வர்த்தக சங்கத்தினர் போராட்டம்

கந்தர்வகோட்டை, நவ.26: கந்தர்வகோட்டையில் பிசானத்தூர் கிராம த்தில் மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கு எதிராக வர்த்தக சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதை எதிர்த்து கந்தர்வகோட்டை வர்த்தக சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை நேற்று கடையடைப்பு செய்து ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூர் கிராமத்தில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்காகவும் மருத்துவக் கழிவு ஆலையை எதிர்த்தும் கந்தர்வகோட்டை வர்த்தக சங்கத்தினர் தங்களது கடைகளை முற்றிலுமாக அடைத்து ஆதரவு தெரிவித்தனர்.

கந்தர்வகோட்டையில் உள்ள அத்தியாவசிய கடைகளான காய்கறி, பழங்கள், மளிகை உணவகம் தேநீர் கடை உள்ளிட்ட சிறு கடைகள் முதல் அனைத்து கடைகளையும் தன்னார்வமாக கடையடைப்பு செய்து வர்த்தக சங்கத்தினர் பிசானத்தூர் கிராம பொதுமக்களுக்கு ஆதரவாக கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மாபெரும் கடையடைப்பு போராட்டத்தால் கந்தர்வகோட்டை பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த போராட்டத்தில் அனைத்து ஆட்டோ ஒட்டுனர் சங்கம் கலந்துகொண்டு காலை 6 மணி முதல் மாலை 6 வரை ஆட்டோக்களை இயக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Advertisement

Related News