புதுக்கோட்டையில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
புதுக்கோட்டை, ஆக. 19: தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு உள்ளாட்சித் தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலர். முகமதலிஜின்னா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலர். தர், உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், மாநகராட்சித் தூய்மைப் பணிகளை தனியாருக்கு கொடுக்கக் கூடாது. நீண்டகாலம் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர்.
Advertisement