தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கந்தர்வகோட்டை வார சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி

கந்தர்வகோட்டை, செப். 2: கந்தர்வக்கோட்டையில் திங்கள் கிழமை வாரச்சந்தையில் பொதுமக்கள் ஆர்வமுடன் காய்கறிகள், கீரைகளை வாங்கிச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை நகரில் திங்கள்கிழமை வாரச் சந்தையில் நேற்று பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான வியாபாரிகள் லோடு வாகனங்களிலும், இருசக்கர வாகனங்களிலும் காய்கறி, கருவாடு, மீன், கீரை, சோளப்பொறி, பலசரக்கு உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்தனர். வார சந்தையில் குறைவான விலையில் பொருள்கள் வாங்க கந்தர்வக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளிலும், இருசக்கர வாகனங்களிலும், நடந்து வந்தும் தங்கள் வீடுகளுக்குத் தேவையான காய்கறி, மளிகை பொருட்கள் வாங்கினர்.

Advertisement

அதில், தக்காளி ரூ.20க்கும், வெங்காயம் 20, கத்தரி காய் 40, பின்ஸ், கேரட், அவரை ஆகியன கிலோ 60, உருளைக்கிழங்கு 30 ரூபாய்க்கும் விற்பனையாகின. மேலும், தேங்காய் கிலோ 80 ரூபாய் என விற்பனை ஆனது.

வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறி விலை குறைவாக உள்ளது என நிம்மதியடைந்தாலும, தேங்காய் விலை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், மாலையில், மேகக்கூட்டங்கள் திரண்டு, சில்லென காற்று வீசியதால், மழை வருமோ என்ற அச்சத்தில் வியாபாரிகள் கவலையடைந்தனர்.

Advertisement