தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பங்குசந்தையில் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி புதுவை நபரிடம் ரூ.39.02 லட்சம் மோசடி

 

Advertisement

புதுச்சேரி, ஆக. 2: பங்குசந்தையில் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி புதுவை நபரிடம் ரூ.39.02 லட்சத்தை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த சபரி கிரிஜா என்பவரை மர்ம நபர் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளார். இதைநம்பி சபரி கிரிஜாவும் மர்ம நபர் அனுப்பிய இணையதளத்தில் ரூ.39.20 லட்சத்தை முதலீடு செய்து மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளார்.

இதேபோல் பங்குசந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியதை நம்பி புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த வாசுதேவன் என்பவர் ரூ.90 ஆயிரம், முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த குபேரன் என்பவர் ரூ.1.96 லட்சம், முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த ரேவதி என்பவர் ரூ.46 ஆயிரம் முதலீடு செய்து மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளனர். தொடர்ந்து உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்த சாம்வேல் என்பவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு வங்கி அதிகாரி போல் பேசியுள்ளார்.

அப்போது தங்களது கிரெடிட் கார்டு லிமிட்டை உயர்த்துவதாக கூறி, விவரங்கள் கேட்டுள்ளார். இதைநம்பி சாம்வேல் விவரங்கள் வழங்கிய சிறிது நேரத்தில் அவரது கார்டிலிருந்து ரூ.28 ஆயிரத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. மேலும் உப்பளம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரை மர்ம நபர் தொடர்புகொண்டு பிரீ பையர் கேம் ஐடி விற்பனைக்கு உள்ளதாக கூறியுள்ளார்.

இதைநம்பி சங்கர் ரூ.26 ஆயிரம் அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். மேற்கூறிய 6 பேர் மொத்தமாக ரூ.43.06 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Related News