தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உத்திரமேரூரில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

 

Advertisement

உத்திரமேரூர், மே 31: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் பட்டஞ்சேரி, நீரடி, மணித்தோட்டம், நல்லூர், ஓங்கூர், குப்பையநல்லூர், கல்லமாநகர், மல்லிகாபுரம், மல்லியங்கரணை, பருத்திக்கொள்ளை, ஆணைப்பள்ளம், காக்கநல்லூர், வேடபாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்கள் தங்களது திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்தநாள் விழா, வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கும் சுயஉதவி குழு கூட்டங்கள் போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கும் உத்திரமேரூரில் உள்ள தனியார் திருமண மண்டபங்களை நாட வேண்டியுள்ளது.

உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் குறைந்தபட்ச வாடகையாக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.

இதனால் ஏழை, எளிய மக்கள் தங்களது சுபநிகழ்ச்சி மற்றும் பொது நிகழ்வுகளை தனியார் திருமண மண்டபங்களில் நடத்திட அதிக செலவீனம் ஏற்படுவதால், பொதுமக்கள் கடும் நிதி சுமைக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. இதனைபோக்கும் வகையில் உத்திரமேரூர் பேரூராட்சியில் அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்திடும் வகையில் புதியதாக சமுதாய கூடம் அமைத்துத்தர வேண்டும் என உத்திரமேரூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Related News