தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கூட்டுறவு கடன் சங்கத்தை பிரிக்கும் முடிவை கைவிட வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

 

ஈரோடு,ஜூலை11: பணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  ஈரோடு மாவட்டம்,பெருந்துறை தாலுகா, கருமாண்டிசெல்லிபாளையம், காடபாளையத்தில் பணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.

நல்ல முறையில் செயல்பட்டு வரும் இந்த கடன் சங்கத்தை தற்போது இரண்டாக பிரித்து, கருமாண்டிசெல்லிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் என புதிய சங்கம் அமைத்து தர வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.அவ்வாறு பிரித்து கொடுத்தால் சங்கம் நலிவடையவே வழிவகுக்கும். ஏற்கனவே சங்கம் அமைந்துள்ள இடமானது கருமாண்டிசெல்லிபாளையம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட காடபாளையத்தில் தான் இருக்கிறது. இந்த இடம் அனைத்து பகுதியினருக்கும் ஏற்ற மத்திய பகுதியாகவும், போக்குவரத்து அதிகம் உள்ள இடமாகவும் மற்றும் கூட்டுறவு வங்கி கிளை, கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை அருகிலேயே உள்ளது.

இதனால் அனைவரும் அங்கு வந்து தங்களது சேவைகளை எளிதில் பெற முடியும்.

ஆனால், இச்சங்கத்தை பிரித்து புதிதாக அமைக்கப்படும் சங்க எல்லையில், கிராம நிர்வாக அலுவலரின் சான்றின்படியே 1,832.97 ஹெக்டர் நிலப்பரப்பு மட்டுமே இருப்பதாக தெரிய வருகிறது. எனவே, அரசாணையின் தகுதியை முழுமையாக கொண்டிருக்காத நிலையில்,பணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பிரித்து, கருமாண்டி செல்லிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் என புதியதாக அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.

Related News